Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

மனிதாபிமானம்

Leave a Comment

மனிதாபிமானம்
என்ன என்பது நேற்றுவரை
எனக்கு தெரியவில்லை...

தெரிந்துகொண்டேன்

கற்பிணி பெண் ஒருவர்
நிற்கையில் அவளுக்காக
ஒதுக்கப்பட்ட ஆசனத்தில்
நாமே இருப்பதையும்....

கையில் குழந்தையுடன்
தாய் வந்தாலும் - இவள்
பெண்தானே என்று 
ஒருமுறை உரசி
கடந்து போவதையும்...

மனிதாபிமானம் என்று 
இன்று தான் அறிந்து கொண்டேன்...!

தமிழ்நிலா

வவுனியா - யாழ்ப்பாணம்
தனியார் பேருந்து
மாலை 4 .45
17-02-2012
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா