Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கம்பி வேலிக்குள் ஒரு காதல்..

Leave a Comment
என் பேருந்து பயணத்தின் நண்பர் ஒருவரின் கதை இது...



பருவம் ஆகிவிட வயதிருந்தும்
உன்மேல் எனக்கு அப்போதே காதல்...
பருவம் அடைந்தாய்
எல்லோருக்கும் சந்தோசம்..
எனக்கு மட்டும் கவலை..
எங்கள் கோட்டைக்குள்
குள்ளநரிகள் அன்று தான் வந்திருந்தன..

வான் சுற்றும் வண்டுகள் போல்
உன்னை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தேன்..
களமுனையில் தோட்டாக்கள்
சிதறிக்கொண்டிருந்தன..
உன்னை பாதுகப்பதற்காய் என்
பார்வை தோட்டாக்களும் கூட...
எம் காதல் வலயமானது..
முட்கம்பி வலயமானது...

கவிஞர்களின் கற்பனைக்குள்
எட்டாதவள் நீ.. என்
கண்களுக்குள் மட்டும் எப்படி
காவியமானாய்...


எனக்கு நீ சாதாரணமானவள் தான்..
மற்றவா்களுக்கு என்
அசாதாரணமாய் தெரிந்தாய்..
மலராத மலர் உன்னை
சருகாக கசக்கிய அந்த
கயவன் யார் என சொல்லாமல்
ஏன் மறைந்தாய்....

அன்பே..

மீண்டுவிட்டோம்...
மீளவில்லை...
மீட்கவில்லை...
உன் காதல்களோடு
நான் மட்டும்...
மீட்டுக்கொண்டிருகிறேன்...
உன் நினைவுகளை மட்டும்...

தமிழ் நிலா

காற்றுவெளி May 2012
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா