கடல்
பூமியின் அழகு...
அழிந்து போகாத
தண்ணீர்க் காடு..
நிலம் அங்கம் மறைக்க
போர்த்தியிருக்கும் நீல ஆடை..
சூரியனையே உண்ணும்
அழகு இராட்சதன்..
நிலவு முகம் பார்க்கும்
திரவ கண்ணாடி...
அலையும் காற்றும் உறங்கும்
முதலிரவு மெத்தை...
நேற்று பிறந்த குழந்தை கடல்
அழுது கொண்டே இருக்கிறது....
கடல் எனக்கானது..
என் மூதாதையரின் தாய்...
நாங்கள் நடந்து வந்த
ஒற்றையடிப் பாதை...
வரலாறுகளை தின்று
முடித்திருந்த கடலின்
கரையின் மணலில்
நண்டுகள் கிறுக்கிய கவிதைகளை
ரசித்துக்கொண்டு நின்றேன்...
என்ன ஆச்சரியம்...
நீர் மூழ்கி கப்பல்களை
கொள்ளையடிப்பதர்ற்கு
தயாராக நின்றது வள்ளங்கள்...
வள்ளங்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தன
அலைகள்...
அலைகளின் ஊடு
வலைகள் கடந்திருந்தது..
மீனவர்கள் கொள்ளைக்கார்களாம்...
முதல் முறை அலை வந்து
வருடி போயிற்று..
வருந்திக்கொண்டேன்...
கடல் கொலைகாரன் என்றான் மனிதன்..
கடிந்து கொண்டேன் அலையை...
பாய்ந்து என் கால்களுக்கு அடியில்
மண்ணைக் கரைத்து
தமிழ்நிலா
மண்ணைக் கரைத்து
விழ வைக்க முயன்று
தோற்று போகிறது அலை...
தோற்று போகிறது அலை...
தமிழ்நிலா
anna nalla irukku vaalthukkal,
ReplyDeleteநன்றாக இருக்கிறது சகோ
ReplyDeleteதொடருங்கள்
நன்றாக இருக்கிறது சகோ
ReplyDeleteதொடருங்கள்
வர்ணனை அருமை...
ReplyDeletemmmm
ReplyDeletearumai...
mmmm
ReplyDeletearumai...
மிக்க மிக்க நன்றி
ReplyDelete