Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

புலம்பிக்கொண்டிருந்தது பறவை...

2 comments

கடலும், வெளியும்
எல்லைகளாய் கொண்ட
பறவையுடன் நட்பு கிடைத்தது..

இறக்கைகள் அழகு என்றார்கள்
ஆனால் கம்பீரமாக இருந்தது..
இரவு பகல் பறந்தும்
களைக்கவில்லை..
புயல்களில் அடிபட்டும்
வீழவில்லை...

மனதினை ஒருநிலைப்படுத்த
கற்றுத்தந்ததே இது தான்...

கால்கள் மென்மை என்றார்கள்
ஆனால் உறுதியாக இருந்தது...
மலைகளிலும் மரங்களிலும்
எப்படி லாபகமாக பற்றிகொள்ளும்..

என் கால்களை உறுதியாக்க
இதனிடம் இருந்து தான்
கற்றுக்கொண்டேன்...

சுள்ளிகளால் சின்ன தாஜ்மஹால்கள்
அலகினால் கட்டிக்கொள்ளும்...
உதடுகளால்
எம்மால் என்ன செய்ய முடியும்
அது தானே...

ஒரு சிறகு முளைத்த பறவை
என் செல்லப்பிராணி ஆனது..
பெயர் தெரியாத அப்பறவையின்
ஒவ்வொரு செயலும் பிடித்திருந்தது..

தனது வட்டங்களை பெரிதாத கொண்டது..
அதனால் பிடித்திருந்தது..
இயற்கையின் வேறுபட்ட ஓவியம்..
அதனால் பிடித்திருந்தது..
மேல் எழும் திடீர் என்று
மடிமீது அமரும்..
அதனால் பிடித்திருந்தது..
வெற்று வானை
எப்படியோ நிரப்பி விடுகிறது...
அதனால் பிடித்திருந்தது..

கூட்டில் இருந்த பறவையை
வீட்டில் வைத்த மகிழ்ச்சி.. எனக்கு
வீட்டில் இருந்த தன்னை
கூட்டில் வைத்ததாக மகளிடம்
புலம்பிக்கொண்டிருந்தது பறவை...

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா