
நீர் உண்டு நிலம் உண்டு
வானம் உண்டு வாயு உண்டு
தீ உண்டு நீ உண்ணும்
மயான பூமியாட இது...
இசைகள் இசையற்று
சுருதிகள் சுதியிழந்து
தாளங்கள் தப்பாய் போன
மனிதங்கள் மரித்து
புனிதங்கள் புதைந்து
கடவுள்கள் காணாமல் போன
மயான பூமியாட இது...
நட்பில் துரோகம்...
காதலில் காமம்...
உறவுகளில் வேஷம்...
எல்லாமே சபிக்கப்பட்ட
குணத்துடன் பணம் கலந்து
செய் நன்றிதனை மறந்த
மொழியுடன் மொழி கலந்து
தாய்மொழி கற்பிழந்த
மயான பூமியாட இது...
என்ன செய்வது
அவளும் என் தாய்தான்,
என்ன செய்வது
அவளும் என் சகோதரிதான்,
என்ன செய்வது
அவளும் என் தோழிதான்....
இசைகளை எழுப்பப்பார்க்கிறேன்,
சுருதிகளை மீட்கப்பார்க்கிறேன்,
என்னால் முடியவில்லை...
கடவுளை தேடிப்பார்க்கிறேன்..
புனிதங்களை தோண்டப்பார்க்கிறேன்
என்னால் முடியவில்லை...
எதுவும் என்னால்
செய்ய முடியாத வாழ்க்கை....
எதுவும் என்னால்
நிர்ணயிக்க முடியாத உலகம்...
ஓரமாய் இருந்து
எழுதிவிட்டு போகிறேன்.. நானும்
இந்த மயான பூமியிடம்...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தேசிய இலக்கிய விழா 2012
மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது..
(யாவும் கற்பனையே...)
(யாவும் கற்பனையே...)
இரவெல்லாம் முழித்துக் கொண்டிருந்து அழுது விட்டு பின் தூங்கியதில் விடிந்து பகல் ஆனதும் தெரியாமல் உறங்கிக்கொண்டு இருந்தாள் சுபா. அவளது மூத்த மகள் தீபா முற்றத்தில் இருந்து தனது நிழலையே முறைத்து பாத்தபடி இருந்தாள்.

நட்புக்கு மரணம் இல்லை Vol-1
நட்புக்கு மரணம் இல்லை Vol-2
By- தமிழ்நிலா
Photos - Thanks to Google
Music Credit - Naveena Saraswathi Sabatham team
My blogger - www.onemanspoems.blogspot.com
தமிழ்நிலா

என் கனவுகள் வித்தியாசமானவை
விசித்திரமானவையும் கூட
மேகமே இல்லா இடத்தில்
மழை பொழிவது போலவும்,
காற்றே இல்லா இடத்தில்
புயல் வருவதை போலவும்..
இருக்கும் என் கனவுகள்...
கடலில் இருந்து மலைகளுக்கு
அருவிகள் ஓடுவது போலவும்
வானில் இருந்து பூமி நோக்கி
நிலா வருவது போலவும்
இருக்கும் என் சில கனவுகள் ..
இராணுவ வீரர்களின்
சட்டைப்பைகளில் காந்தி...
காந்தீயவாதிகளின்
கைகளில் கத்திகள்...
பாலைவன வெயில்
வெறுங்காலுடன் சிறுமி...
திடீர் என மழை..
எங்கிருந்தோ முளைவிடும்
பசும் புற்கள்...
அடிக்கடி வந்துபோகிறது ...
எதோ ஒரு போர்
வானில் இருந்து தட்டுக்கள்
இருண்டு விடுகிறது பாரே..
சத்தம் மட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கும்..
நாடு இரவில் பயமுறுத்தும்...
அருங்காட்சியகத்தில்
ஒரு குவளை நீர்...
சோறு அடைத்த பைகள்..
நிர்வாண மிருகம்..
அச்சடிக்கப்பட துண்டுக் காகிதம்..
சுண்டுவிரலில் இணையம்..
சூனியமான ஏதோ ஒன்று..
தொடராத அதிகலைக்கனவிது....
ஒற்றை இறகு வண்ணாத்து பூச்சி...
கொம்பு முளைத்த மனிதன்..
அங்கும் இங்குமாய் கிழிந்த துணிகள்...
பூக்களில் இரத்தம்..
துப்பாக்கியில் கண்ணீர்..
அடிக்கடி பகிரப்படும் சில உருவங்கள்..
என்ன கனவிது..??
என் கனவுகள் விசித்திரமானவை
விளங்கிக்கொள்ள முடியாததும் கூட...
தமிழ்நிலா
காற்றுவெளி December 2013

சாமி வலம்வந்த இரண்டு சக்கர தேர்.
தாரில் தவழும் நான் பார் பார்த்த
புட்பக விமானம்...
அதே சைக்கிள் அதே அப்பா
அன்றும் இன்றும்..
ஆரம்பத்தில்
அம்மாவின் மடிதான்
வானம் மட்டும் பார்த்தேன்..
நாட்கள் நகர எனக்கென்று
ஒரு இருக்கை...
கைபிடியில் கொளுவி
சிம்மாசனம் போல் இருக்கும்
என் பின்னல் கதிரை..
நாளாக முன் இருக்கை எனதானது...
அப்பாவின் சைக்கிளில் இருந்து
உலகம் பார்த்தேன்.
என் முதல் பயணம்..
எனக்கு ரசிக்க பழக்கியது
பல கதைகளை சொல்லும்
என் ஒவ்வொரு பயணங்களும்..
உல்லாச பிரயாணி நான்
வழிகாடி அப்பா...
எம்மை போல அதனிலும்
ஒரு பார்வை எப்போதும் இருக்கும்..
பூசி மெழுகி தேவதை போல
பார்த்துக்கொள்வார்...அப்பா
எங்கள் பள்ளிக்கு வரும்
உறவினரின் இன்ப துன்பத்தில்
கலந்து கொள்ளும்..
உடமைகளை காவிச்செல்லும்
போர்காலத்திலும் எம்மில் ஒன்றானது...
சைக்கிளுடன் காலமும் ஓடிவிட்டது...
நான் சற்று மாறியிருந்தேன்...
அதே சைக்கிள் அதே அப்பா
ஆனால் வேர்வை படிந்தும்
துருப்பிடிக்கவில்லை மிதிகள்,
மிதித்த கால்கள் சற்று தளர்ந்திருந்தன...
மணி ஓசை அப்படியே,
குரல் ஓசை குறைந்து விட்டது..
பற்றிய கைபிடிகள் ஓடிய சக்கரங்கள்
இன்னும் மின்னிக்கொண்டது..
பார்வை மங்கிக்கொண்டது...
காணமல் போய்க்கொண்டிருக்கும்
அப்பாவின் சைக்கிளும்
காணமல் போய்விட்டது
அன்றொருநாள்.....
தமிழ்நிலா
காற்றுவெளி November 2013

மிருகங்கள் பேசச்செய்தேன்
பறவைகள் சிரிக்கச்செய்தேன்
பச்சைகள் கொண்டு பூமியை மூடி..
செங்கறைகளை கரைத்து
நீரினை பாச்சி மீண்டும்
உலகத்தை செளிக்கச்செய்தேன்..
மொழியில்லா பாசை பேசும்
முகமில்லா மனிதர் வாழும்
மதமில்லா கடவுள் கொண்டு
புதிதாய் ஓர் உலகம் செய்தேன்
உருவம் கொடுத்தேன்
உணர்வை கொடுத்தேன்..
உயிரைக் கொடுத்தேன்...
எல்லாம் கொடுத்தேன்
புதிதாய் ஓர் உலகம் செய்தேன்
ஒன்றை மறந்தேன்
மனிதம் மட்டும் வைக்க மறந்தேன்..
மனிதம் தேடி கடவுளிடம் போனேன்
அங்கும் இல்லை.. எங்கும் இல்லை..
பூமியில் எங்கோ இருப்பதாய் சொன்னார்..
கண்டால் சொல்லுங்கள்
தொலைந்து போனதை...
புதிய உலகம் இருப்பதாய் சொல்லுங்கள்..
மனிதம் சிறிது உங்களுக்கும் தருகிறேன்....

01
ஆரம்பத்தில் எல்லாமே
ஒளியாக தான்..
மங்க தொடங்கியது
மனங்களை போல்..
கொஞ்சம் கொஞ்சம் தின்றது..
பிடித்துபோக..
கொஞ்சம் கூட தின்றது..
இப்போ எல்லாமே..
அத்தனையும் ஸ்தம்பிதம்
இருளானபோது..
எச்சங்கள் மட்டும் மிச்சம்..
அப்பப்போ மின்னிக்கொள்ளும்..
சில மனிதங்கள் போல..
ஆன்மா தின்று செரித்து சிரித்து
அண்டம் தின்ன தொடங்கிற்று..
எமக்குள் இருந்து
எம்மை கௌவும்
ஒவ்வொன்றும் எல்லாமும்..
------
02
இது இருள்யுகத்தின்
எதிர்காலம்...
கலியுக இறுதியின் பின்னான
முதல் நாள்...
மின்மினிகளிடம்
கடன் வாங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
இருள் தின்னத்தொடங்கியது ஒளி..
மீண்டும் துளிர்கள்
மீண்டும் இலைகள்
மனிதம் தழைத்திருந்தது..
மனங்களில் தெரிந்தது..
அண்டம் சிரித்தது..
ஆணவம் அழிந்திருந்தது
இருள் ஊழிக்காலத்தில் நீந்தியது...
ஆக்கிரமித்து ஓளி..
எமக்குள் இருந்து
எம்மை தின்னும்
ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும்...
தமிழ்நிலா
காற்றுவெளி October 2013

என் தேநீர்ப்பொழுதுகள்
அம்மாவுடனும் தேநீருடனுமே
தொடங்குகின்றன என்
காலைகள் எல்லாமே..
என் காலைகளில் என்றுமே
தேநீர் இல்லாமலும் இல்லை..
வெறும் சுடுநீரிலும்......
தேயிலைச்சாற்றிலும்...
சீனியும் கொண்டு
குவளை நிறைக்கவில்லை
என் தேனீர்ப் பொழுதுகள்...
அன்பும், காதலும்
அன்பும், காதலும்
அறிவும் அக்கறையும் கொண்டு
நிரம்பியிருக்கும்..
என் தேநீர்க்கோப்பை
சிலநேரங்களில்
குளிர்தேசத்து மதுக்குவளைபோல்
இருக்கும்
இன்னும் சிலநேரங்களில்
குருதி நிறைந்த கிண்ணம் போல்
இருக்கும்...
சூடான என் தனிமைகளை
இளம் சூடான தேநீர் அதிகமாக
எப்படியோ சரி செய்துவிடுகிறது..
சிலநேரங்களில்
குளிர்தேசத்து மதுக்குவளைபோல்
இருக்கும்
இன்னும் சிலநேரங்களில்
குருதி நிறைந்த கிண்ணம் போல்
இருக்கும்...
சூடான என் தனிமைகளை
இளம் சூடான தேநீர் அதிகமாக
எப்படியோ சரி செய்துவிடுகிறது..
அதிக யன்னலோர
தென்றல் பொழுதுகளை...
தேடிப்பெற்ற மழைநேர
சாரல் பொழுதுகளை...
என்றுமே விரும்பாத வெயிலின்
வியர்வைப் பொழுதுகளை...
தவமிருக்கும் பனியின்
குளிர்ப் பொழுதுகளை...
எப்படியும் கிடைக்கும் இரவின்
நிலவுப் பொழுதுகளை...
என்னுடன் பங்கிட்டிருக்கிறது
என் தேநீர்ப்பொழுதுகள்..
ஆரம்பிப்பது போலவே
அம்மாவுடனும் தேநீருடனுமே
முடிந்துவிடுகின்றன..
என்னை எனக்கே காட்டிக்கொள்ளும்..
என் எல்லா தேநீர்ப்பொழுதுகளும்...
தமிழ்நிலா
என்றுமே விரும்பாத வெயிலின்
வியர்வைப் பொழுதுகளை...
தவமிருக்கும் பனியின்
குளிர்ப் பொழுதுகளை...
எப்படியும் கிடைக்கும் இரவின்
நிலவுப் பொழுதுகளை...
என்னுடன் பங்கிட்டிருக்கிறது
என் தேநீர்ப்பொழுதுகள்..
ஆரம்பிப்பது போலவே
அம்மாவுடனும் தேநீருடனுமே
முடிந்துவிடுகின்றன..
என்னை எனக்கே காட்டிக்கொள்ளும்..
என் எல்லா தேநீர்ப்பொழுதுகளும்...
தமிழ்நிலா

எனக்கானவை எல்லாம்
உன்னிடம் இருந்து
கிடைக்கப்பெற்றவை..
என்னிடம் இருந்தும் சிலவற்றை
நீ எடுத்திருக்கிறாய்..
வேண்டியதை எடுத்து
தேவையற்றதை
தந்தும் இருக்கிறாய்..
எடுக்கப்பட்டவை...
கிடைத்தவை இரண்டும்
நீ இருப்பதும்,
இல்லாது இருப்பதும் போலத்தான்..
தேவையின் போது இல்லாமலும்,
இல்லாதபோது தேவையாகவும்..
எப்போதும்...
எப்படியாயினும்...
ஒரு விசை
இயக்கம்...
ஓய்வு...
நூறின் ஒற்றை விளக்கம்...
அத்தனையும் ஒன்றில் அடக்கம்..
அந்த ஒன்று...??
தெளிவான குழப்பம்...
ஆச்சரியமான பூமியில்
கேள்விக்குறியுடன்
நானாக நான்
நீயாக நீ..
சில விளங்க முடியாத உண்மைகள்..
நீயாக முயலும் சில நான்களுடன் காலம்
தமிழ்நிலா
துளிர்களிங்கு கருகிட பிறப்பதில்லை
வேர்களில் இருந்து வலிகளை கடந்து
துளிர் ஒன்று வருகையில் அவை
கருகிட நினைப்பதில்லை...
விடிந்திடும் பொழுதுகள்
விடியலை தேடி அலைவதில்லை...
பூமியின் மேலே பூக்கின்ற பூக்கள்
சாவதை நினைத்து பூப்பதில்லை...
விதைகள் துளிர்விட நினைத்தாலும்
விருட்சங்கள் அதை ஏழ விடுவதில்லை
கைகளை கவிழ்த்து பிடித்தாலும்
தீ என்றும் கவிழ்ந்து எரிவதில்லை...
இருட்டுக்குள் உறங்கிடும் பௌர்ணமியும்
வெளிச்சத்தை தர நினைப்பதுண்டு..
காற்றில் அசையும் புல்வெளியும்
நிமிர்ந்து தான் நிக்க நினைப்பதுண்டு...
புன்னகையை என் திருடவிட்டாய்...
இறைவனின் கோபத்தை திருடிக்கொண்டாய்...
பூக்களின் மென்மையை அடக்கிவிட்டாய்,
ஈக்களின் நிலையினை அடைந்துவிட்டாய்..
தொலையாத ஹைகூக்கள்
தொகையாக கவியாகும்
தொலைதூர நிலவுகள்
உன் வீட்டில் ஒளியாகும்...
உனக்கான ஓர் உலகம்
ஒரு நாளில் உருவாகும்.
போராடு உன் தலை எழுத்தை நீ மாற்ற..
போராடு உன் உலகை நீ மாற்று...

எங்களுக்குள்
எள்ளவும் விதியாசம் இல்லை,
மரம் தாவுவது போலே நான்
மனம் தாவிக்கொ(ல்)ள்கிறேன்..
மார்தட்டிக்கொள்கிறதா
நானும் தான், நான் என்று
மார்தட்டிக்கொள்கிறேன்..
அறிவுகள் பற்றி பேசுகிறாயா..
ஐந்தில் இருந்து ஆறா..
வளர்ந்தவொன்று பேச்சு மட்டும் தான்
கதைத்தே வளர்ந்துவிட்ட
இனம் தானே நாம்..
மண்டையோட்டில் மாற்றம் இல்லை
முதுகுத்தண்டில் மாற்றம் இல்லை
சேட்டைகளிலும் மாற்றம் இல்லை
ஆடை போட கற்றோம்,
தலை சீவ கற்றோம்...
வாலைச்சுருட்டி வைக்க பழகி,
வால்பிடிக்க கற்றோம்...
மரபணுவை மாற்றிப்
பின்னிக்கொண்டோம்
இருந்தும்...
மந்திக்கும் என் மரபணுவுக்கும்
மயிரளவும் மாறுதல் இல்லை...
நேற்றும் ஒரு கனவு
மரத்தில் இருந்து கிளை தாவுகையில்
திடீரென விழுந்துவிட்டேன்...
தமிழ்நிலா

காணாமல் போன ஒன்று
யாரும் காணாமல்
கிடக்கிறது
அடித்து, தூக்கி வீசி
நான்குமுறை நான்குசக்கரங்கள்
ஏறிச்சென்றபின்னும்
எதிர்பார்ப்புகளுடன்
மறுபடியும் துடிக்கிறது இதயம்..
ஒரு நண்பகலில்
இரத்தம் சிந்தி,
காய்ந்து, வறண்டு,
தாரோடு தாராய் போய்
தூசி கிளம்பியும்
இன்னும் துடிக்கவில்லை
சிலரது இதயம்..
மாடுகளின் சாணத்தை
சில்லுகள் வாரி அள்ளிச்
செல்வதுபோல்
சிதறிய மிச்சத் சதைகளை
மிதித்து செல்லுகின்றன
வண்டிகள்..
தெருநாய்களும்
கூடிவிட்டன
இன்னும் சில நிமிடங்களில்
மனிதம் செத்துவிடும்..
தூக்கி கரையிலாவது
போட்டுவிட்டு போங்கள்..
காகங்கள்
காவல் இருக்கின்றன..
தமிழ்நிலா

என்றுமே நிரப்பப் படமுடியாத
சில வெற்றிடங்கள்..
இப்போதும் இருக்கின்றன..
இப்போது இருப்பவை
நேற்று இருந்தவை
சில நேரத்தால் வந்தவை
நேரங்களை
அடுக்கி வைத்து பார்த்தேன்.
நிரம்பவில்லை..
சில காலங்களால் ஏற்பட்டவை
காலங்களை
உடைத்து அடுக்கி பார்த்தேன்.
நிறையவில்லை...
சில தொலைந்தவையால் வந்தவை
தொலைந்தவற்றை
தேடியும் பார்த்தேன்
காணவில்லை...
சில உறவுகளால் நடந்தவை
உறவுகளை
புதுப்பித்தும் பார்த்தேன்
மேலும் ஒரு வெற்றிடம்..
நேரத்தை அடுக்கி எதுவும்
நடக்கவில்லை...
காலத்தை துண்டு துண்டாய்
உடைத்து அடுக்கியும்
ஏதும் நிரம்பவில்லை..
தேடியும் பார்த்தேன்..
புதுப்பித்தோ
பழமையை விரும்பியோ
எதுவும் நிறையவில்லை..
இது என்னில் இருப்பது
ஒரு வேளை என்னாலும்
ஏற்பட்டிருக்கலாம்..
இல்லை நான்
ஏற்படுத்திக்கொண்டதாகவும்
இருக்கலாம்...
நிரப்பிவிடவும் முயல்கிறேன்..
இப்போது இருப்பவை
நேற்று இருந்தவை
சிலவேளைகளில்
நாளையும் இருக்கலாம்..
என்றுமே நிரப்பப் படமுடியாத
அழகிய வெற்றிடங்கள்..
இப்போதும் இருக்கின்றன..
தமிழ்நிலா
கடவுளின் இலவச திட்டம்
கடல்நீ்ர் குடிநீராய்
மழை

எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்
மனங்களை தவிர்த்து...
இருண்மை
* * *

இரவுகளிலும் அடித்துக்கொள்கிறது..
இமைகளை போல
வெள்ளைப்பிரம்பு
* * *
தமிழ்நிலா

இரவு நிலவு
இரண்டும் அண்டத்தின்
இரைச்சலை உறுஞ்சி
முடித்திருந்தது..
ஒரு சிலவற்றைத் தவிர..
தெருவோர நாய்..
சில்வண்டுகளின் கூக்குரல்
சில அழுகைகள்..
இன்னும் சில புரியாத அல்லது
புரிந்துகொள்ள முடியாதவைகள்..
மழலையின் காலடி கொண்டு
கிறுக்கல் ஓவியத்தின் வழியே
குப்பி விளக்கின் புகையில்
வர்ணம் பூசப்பட்ட
சில நிழல்கள்..
திரும்ப முடியாத
மரணத்தின் முடிவைத்தேடி
சாவிதொலைத்த அந்த
ஒற்ரைப்பாதையின் ஓரத்து
போதைச் சேற்றில்
தெரிந்தோ தெரியாமலோ விழுந்து
வெப்ப உலகத்தின் கடைசி
நீர்த்துளியையும் குடித்து செரித்துவிட்டு
மூர்ச்சை அற்று கிடக்கின்றன..
இந்த மனித நாற்றுக்கள்..
சில விடைகளுடன் பல கேள்விகளுக்காக..
தமிழ்நிலா
காற்றுவெளி May 2013
நீர்த்துளியையும் குடித்து செரித்துவிட்டு
மூர்ச்சை அற்று கிடக்கின்றன..
இந்த மனித நாற்றுக்கள்..
சில விடைகளுடன் பல கேள்விகளுக்காக..
தமிழ்நிலா
காற்றுவெளி May 2013

திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...
நிகழ்காலம் எப்போதோ
தோற்றாகிவிட்டது..
நிகழ்ந்தவை அத்தனையும்
உனக்கு எதிரானவையே..
இறந்தகாலம் எதிர்காலத்தை
கவர்ந்து கொள்கிறது..
உனக்கு எதிரானவையே..
இறந்தகாலம் எதிர்காலத்தை
கவர்ந்து கொள்கிறது..
திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...
தமிழ்நிலா

இவர்கள் யார்..?
புயலை உருவாக்கக்கூடியவர்கள்..
தென்றலுடன் நடக்கிறார்கள்..
அலையாக எழுந்தவர்கள்
ஏனோ சலனமற்றுக்கிடக்கிறார்கள்...
சிறகடித்து பறக்கக்கூடியவர்கள்
தரையினில் நெளிந்து கடக்கிறார்கள்...
வெளிச்சம் படைத்தவர்கள்
இருட்டில் தவழ்ந்து செல்கிறார்கள்...
இவர்கள்...
ஒன்று பத்தாகி, பத்து நூறாகி,
நூறு ஆயிரமாகி, ஆயிரம் இலட்சமாகி,
இலட்சம் கோடியான பின்னும்..
தனியாகவே நடக்கிறார்கள்..
இமயம் இதயம் இரண்டையுமே
பாரமாக தான் பார்க்கிறார்கள்...
வழி வலி இரண்டையுமே
எதற்காகவோ வெறுக்கிறார்கள்...
பலி பழி இரண்டையும் நேசிக்கிறார்கள்..
காதல் காமம் இரண்டையும் கலக்கிறார்கள்..
இப்படி எப்படியோ தடுமாறி நடுக்கிறார்கள்
ஒவ்வொரு நாட்டின் இளைஞர்களும்...
முகவரி இல்லாத முகவுரையுடன்
அலைந்து கொண்டிருக்கும் இவர்கள் தான்
எம் தேசத்தின் நாளைய தலைவர்கள்...
தமிழ்நிலா
காற்றுவெளி March 2013
பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..
காதலர் தினம் 2013
By- தமிழ்நிலா
Music Credit- U1
S.A.Nilaan இன் தயாரிப்பில், S.A.N Pictures வழங்கும், நம்மூரு தெருவோரம்...
தென்மராட்சியின் வரலாற்றில் இன்னும் ஒரு தடமாக பதிகிறது நம்மூரு தெருவோரம்...பாடல். S.A.N Pictures S.A.Nilaan இன் முயற்சியில் உருவாக்கி இருக்கும் முதல் பாடல், யாழ் மண்ணுக்கு தென்மராட்சியில் இருந்து சமர்ப்பணம்.
அன்புடன் தமிழ்நிலா
தென்மராட்சியின் வரலாற்றில் இன்னும் ஒரு தடமாக பதிகிறது நம்மூரு தெருவோரம்...பாடல். S.A.N Pictures S.A.Nilaan இன் முயற்சியில் உருவாக்கி இருக்கும் முதல் பாடல், யாழ் மண்ணுக்கு தென்மராட்சியில் இருந்து சமர்ப்பணம்.
புகழ் பெற்ற யாழின் இசை அமைப்பாளர் முரளி இன் இசையில் சஞ்சய் தமிழ்நிலா வின் இன் பாடல் வரிகளில் S.A.நிலான் குரலில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் நண்பர்களிடையே மிக்க வரவேற்பை பெற்றுள்ளது.
Kuranku Pictures இன் காணொளியினை அழகுற மாற்றி S.A நிலான் தொகுத்துள்ளார். தனது வேலைப்பழுவின் மத்தியிலும் சிறிது நேரம் ஒதுக்கி இசை தந்த இசை அமைப்பாளர் முரளி அவர்களுக்கும், Kuranku Pictures க்கும் தொகுப்பில் உதவிய Ltr Lavan இற்கும் நன்றிகள்.
Music-Murali
இசை - முரளி
Lyricts-Sanjay Thamilnila
வரிகள் - சஞ்சய் தமிழ்நிலா
Singer-S.A.Nilaan
குரல் - S.A. நிலான்
Video - Kuranku Pictures
வீடியோ - குரங்கு பிக்செர்ஸ்
Editing - S.A.Nilaan, Ltr Lavan
தொகுப்பு - S.A. நிலான் & Ltr லவன்
Video - Kuranku Pictures
வீடியோ - குரங்கு பிக்செர்ஸ்
Editing - S.A.Nilaan, Ltr Lavan
தொகுப்பு - S.A. நிலான் & Ltr லவன்
S.A.N Pictures இன் அடுத்த பாடல் விரைவில் வெளிவரும்...
அன்புடன் தமிழ்நிலா