Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நானும் குரங்கும்..

Leave a Comment


எங்களுக்குள்
எள்ளவும் விதியாசம் இல்லை,
மரம் தாவுவது போலே நான்
மனம் தாவிக்கொ(ல்)ள்கிறேன்..

மார்தட்டிக்கொள்கிறதா
நானும் தான், நான் என்று
மார்தட்டிக்கொள்கிறேன்..
அறிவுகள் பற்றி பேசுகிறாயா..
ஐந்தில் இருந்து ஆறா..
வளர்ந்தவொன்று பேச்சு மட்டும் தான்
கதைத்தே வளர்ந்துவிட்ட
இனம் தானே நாம்..

மண்டையோட்டில் மாற்றம் இல்லை
முதுகுத்தண்டில் மாற்றம் இல்லை
சேட்டைகளிலும் மாற்றம் இல்லை
ஆடை போட கற்றோம்,
தலை சீவ கற்றோம்...
வாலைச்சுருட்டி வைக்க பழகி,
வால்பிடிக்க கற்றோம்...

மரபணுவை மாற்றிப்
பின்னிக்கொண்டோம்
இருந்தும்...

மந்திக்கும் என் மரபணுவுக்கும்
மயிரளவும் மாறுதல் இல்லை...

நேற்றும் ஒரு கனவு
மரத்தில் இருந்து கிளை தாவுகையில்
திடீரென விழுந்துவிட்டேன்...


தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா