Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

வைரமுத்து

3 comments

வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் முன்பு இளையராஜவுடனும் , பின்னர்
ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

பெயர்: கவிப்பேரரசு வைரமுத்து
பிறந்த இடம்: வடுகப்பட்டி கிராமம்,தேனீ மாவட்டம் தமிழ்நாடு,இந்தியா.

பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 .

தகப்பனார்: ராமஸ்வாமி தேவர்.

தாயார்: திருமதி அங்கம்மாள்

மனைவி: பொன்மணி

மகன்: கார்க்கி ,கபிலன்

எழுத ஆரம்பித்தது: 7'வது வயதில்















  • 12 வயதில் பாடல்கள் எழுத முடிந்தது
  • 14 வயதில் யாப்பு வடிவிலான வெண்பா கவிதை எழுத முடிந்தது.
  • பாடசாலை இறுதி ஆண்டு பரீட்சையில் மதுரை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார்.
  • உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மேற்கொண்டார்.
  • பத்தொன்பதாவது வயதில் முதல் கவிதை தொகுப்பான "வைகரை மேகங்கள் "வெளியிட்டார்.
  • உயர் கல்வி: M.A. தமிழ் இலக்கியம்(தங்கப்பதக்கம்)
  • திரைப்பட அறிமுகம்: பாரதிராஜாவின் "நிழல்கள்"திரைப்படத்தில் "பொன்மாலைப்பொழுது"என்ற பாடல்.

  • முதல் வசனமெழுதிய படம்-நட்பு.


பெற்ற விருதுகளில் சில :


  1. தமிழ் நாடு அரசின் மாநில விருது-1981
  2. தேசிய விருது-1986 (முதல் மரியாதை )
  3. M.G ராமச்சந்திரன் விருது-1989
  4. கலைமாமணி விருது-1990
  5. தேசிய விருது-1993 (ரோஜா)
  6. தேசிய விருது-1995 (கருத்தம்மா)
  7. தேசிய விருது-1995 (பவித்திரா)
  8. தேசிய விருது-2000 (சங்கமம்)
  9. தேசிய விருது-2003 (கன்னத்தில் முத்தமிட்டால்)
  10. பத்மஸ்ரீ விருது -2003.
  11. சாகித்திய அக்கடமி விருது-2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)
  12. தேசிய விருது-2010 (தென் மேற்கு பருவ காற்று )

கவிதைத் தொகுப்பு


  • வைகறை மேகங்கள்
  • சிகரங்களை நோக்கி
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  • தமிழுக்கு நிறமுண்டு
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • இதுவரை நான்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
  • பெய்யென பெய்யும் ம‌ழை
  • நேற்று போட்ட கோலம்
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்


நாவல்


  • தண்ணீர் தேசம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
  • கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)


அன்புடன் தமிழ் நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

  1. தமிழுக்கு தலைமகன்

    ReplyDelete
  2. Anonymous7:42:00 am

    மொழி நடையும் இசையும் கலக்கும் முன்னும் பின்னும் கவிதை கவிதை தான்...

    ReplyDelete
  3. முத்து ஒன்று வைரமானது

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா