Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


செய்வினையாய்
விலைவாசி...

திணறும் வாழ்க்கை
அத்தியாவசியப் பொருட்களில்
விலை உயர்வு...

ஏழைகள் வீட்டில் 
நிலாவுக்கு தான் இனி வேலை...
மண்ணெண்னைய் விலை ஏற்றமாம்..

மீண்டும் சூரியனுக்கு ஆபத்து..
சக்தியை உறிஞ்சபோகிரார்கள்...
மின்சாரம் விலை ஏற்றமாம்.....

விபத்துகளும் குறையவில்லை
பெற்றோல் விலை ஏற்றமாம்...

உரசல்களும் குறையவில்லை...
பேருந்து கட்டண ஏற்றமாம் 

தாசிகளும் குறையவில்லை...
மாப்பிளை விலையேற்றம்...

நாட்டில் விலை  ஏற்றம்...
தற்கொலைகளும் மீள் ஏற்றம்..
காசும் விலை  ஏற்றம்...
கண்ணீரில் உப்பும்  ஏற்றம்..
பாணும் விலை ஏற்றம்...
பட்டினி சாவுகளும் இனி ஏற்றம்...

தமிழ்நிலா

நண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒருமுறை உங்களை இந்த 2 ஆவது குறும்கவிதைகள் ஊடாக சந்திக்கிறேன். நீங்கள் கொடுத்து வரும் சிறிய ஆதரவுக்கு பெரிய கடமைப்பட்டிருக்கிறேன்.

ப்போது ஊடகங்கள் எல்லாவற்றிலும் அதிகமாக பேசும் செய்தியாகவும், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோரையும் கலங்க வைத்திருக்கும் செய்தி மரீ கோல்வின் இன் படுகொலை.

வர் பற்றிய தகவல்களை நீண்ட நாட்களாக தேடி ஒருவாறு இன்றுதான் கண்டு பிடித்தேன். 2006 இல் நாங்கள் சாதாரணதரம் கற்கும் போது எமது தனியார் கல்வி நிறுவனத்தில் (பிறைற்றின்)  எமக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர். மிகுந்த ஆளுமை உள்ளவர்,
ஒரு நாள் ஒரு புத்தகம் கொண்டுவந்திருந்தார். அந்த புத்தகத்தின் பெயர் "எனக்கு மரணம் இல்லை" அதில் எழுதியவர் பெரிய ஐங்கரன் என்று இருந்தது.

மனிதாபிமானம்
என்ன என்பது நேற்றுவரை
எனக்கு தெரியவில்லை...

தெரிந்துகொண்டேன்

கற்பிணி பெண் ஒருவர்
நிற்கையில் அவளுக்காக
ஒதுக்கப்பட்ட ஆசனத்தில்
நாமே இருப்பதையும்....

கையில் குழந்தையுடன்
தாய் வந்தாலும் - இவள்
பெண்தானே என்று 
ஒருமுறை உரசி
கடந்து போவதையும்...

மனிதாபிமானம் என்று 
இன்று தான் அறிந்து கொண்டேன்...!

தமிழ்நிலா

வவுனியா - யாழ்ப்பாணம்
தனியார் பேருந்து
மாலை 4 .45
17-02-2012

காதலர் தினம் நெருங்கிவிட்டது. காதலர்கள் படு பிஸி யாக இருக்கிறார்கள். இருந்தாலும். இந்த காதலர் தினம் பற்றி பலருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கும் தான். நண்பன் ஒருவன் கேட்டான். அதற்காக ஆராய்ந்தபொழுது ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது.

STAR MEDIA WORKS இனால் இந்த 2012 காதலர் தினத்துக்காக எனது கவிதைகள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நான் வரிகளை எழுதி இருந்தேன், பின்னனர் எமது நண்பன் தங்கநேசன் இதனை காணொளியாக உருவாக்கியுள்ளார். 

மக்கள் எல்லோருக்கும்
ஒரு செய்தி...

விடிகையில் வரும் வெள்ளியை
சில நாட்களாய் காணவில்லையாம்..
கண்டு பிடித்து தருபவர்களுக்கு
பொற்காசுகள் வழங்கப்படும்

ஒஹ்ஹ்ஹ
மீண்டும் மன்னராட்சியா..??
மீண்டும் குடும்ப ஆட்சியா??
ஜயோ மீண்டும் சர்வாதிகாரமா??

அப்பாவின் பின் மகன்..
மாமாவின் பின் மருமகன்..
கணவனின் பின் மனைவி..

கால்நடையாய் வந்து
களைப்பாருவோர் எல்லாம்
மந்திரிகளாம்...
காற்றில் அடிபட்டு
கரையோதுங்குவோர் எல்லாம்
அமைச்சர்கள் தானே..

ஜனநாயகம் எங்கே
விடியலை தேடுகிறதோ..???
விடிவெள்ளி எங்கே
ஜனநாயகத்தை தேடுகிறதோ..??

தமிழ்நிலா


ப்போது பூக்கும் 
இந்த ஒற்றை ரோஜா
நேற்று அப்படியே 
பச்சையாக தான் இருந்தது...
இப்போ ஒரு வெள்ளை மொட்டு,

குங்கும நிறம்
என்று தான் நட்டேன்...
நேற்றுவரை நீர் ஊற்றினேன் 
இன்று தான் தெரியும்..

அழகிய பூக்களுக்கு
அசிங்கமான முள்ளு எதற்கு..
வாடாமல் இருப்பது
சிலகாலம் தானே..
ஆச்சார முட்டைகளில்
மயிர்களைப்போல்
மரம் எல்லாம் முள்ளு..

தேனீக்களின் அணிவகுப்பு
தொடங்கி விட்டது
பக்கத்து மரம் நோக்கி..
முட்கள் என்ன செய்யும்...
பூக்கள் நினைத்தால்
மட்டும் தான் முடியும்...

இவையோ தேனீக்களை
கவரும் நிறமும் இல்லை..
என்ன செய்யப்போகின்றன..?
அவையும் மணம் பரப்பும்
கொய்து விடாதே.. மனிதா 

எப்போது பூக்கும்
இந்த ரோஜா...!!

விதைவைகளே தயாராகுங்கள்..
உங்களுக்காய் ஒரு புது தோழி...!!

தமிழ்நிலா

விதைவைகள் ஒன்றும் அதிஷ்டம் இல்லாதவர்கள் இல்லை. அவர்கள் வாழ்த்தினால் நீங்கள் இன்னும் கூட வாழலாம், என்னை போல் ஆகிவிடாத என்று மட்டும் தான் வாழ்த்துவார்கள். வலிகள் மட்டுமே சொந்தமான அவர்களை,  மூட நம்பிக்கையினால் நீங்களும் வதைக்காதீர்கள்.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home