Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

மீண்டும் பதற்றமான சூழல்...

Leave a Comment


மனிதாபிமானத்தை
கைப்பற்றுவதற்காய்
மூன்றாம் உலகப்போர்..

தாய்மொழியின்
படுகொலையை கண்டித்து
ஐந்தாவது ஈழப்போர்...

குடி நீர் பெற
படையெடுப்பு..
உணவுக்காய்
மௌன போராட்டம்...

அன்பை தேடி
நடை பயணம்....
வறுமை ஒழிக்க
உண்ணாவிரதம்....

கலாச்சாரம் வாழ
மனித சங்கிலி...
மரங்களை காக்க
பசுமை புரட்சி...

மீண்டும் 
பதற்றமான சூழல் ஆரம்பம்....
தோழர்களே...
வழமைபோல் பதுங்கிவிடுங்கள்..

காணமல் போன பட்டியலில்
ஒற்றுமையும் சேரட்டும்...

-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா