Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பனை நான்....

Leave a Comment
ஆரம்ப பிரிவு தம்பி ஒருவரின் பாடசாலை தேவைக்காக, உடல் உறுப்புகளின் தானத்தின் அவசியம் பற்றி பனையுடன் ஒப்பிட்டு எழுதியது.



பனை நான் பண்புடன்
பாடுகிறேன்... பணிவாய்
பாலரே கேட்டுடுவீர்...

ஒரு விதையால் தான்
நான் பயிரானேன்...
தினம் வளர்ந்து மரமானேன்..
நாளும் உருகி திரியானேன்...
இங்கு பலருக்கு உறவானேன்...

என் தலை எனும் இல்லை ஓலை
கொண்டு ஏழைகளில் வீட்டில்
கூரையானேன்...
என் கண்கள் எனும் நுங்குகள்
தந்து இளசுகள் நெஞ்சில்
நிலையானேன்...

என் இதழ் வழி வழியும் பதநீர்
பழசுகள் உயிராகும்..
என் உடல்களின் சிதைவுகள் எல்லாம்
வீட்டில் விறகாகும்...

என் உடலில் உயிர் உள்ளவரை..
உதவி எல்லாம் செய்கிறேன்..
உயிர் அது போனபின்னும்
பெயருடன் தான் வாழ்கிறேன்...

அது போல் நீங்களும் வாழுங்கள்..
உலகத்தை ஆளுங்கள்...
இருக்கையில் பலருக்கு உதவுங்கள்...
சிறப்புடன் வாழுங்கள்..
உடல் தானம் செய்யுங்கள்...
இறந்தபின்னும் வாழுங்கள்...

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா