Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

உலகம் அழியும் ஆனால்
நாளை என்று யார் சொன்னார்கள்...

மாயன் சொன்னானா..
உன் மாமன் சொன்னானா..
நாளை உலகம் அழியும் என்று..?
மாயன் என்றால் மாயம்
மாயம் என்றால்
கண்கட்டி வித்தை தானே..
உன் கண்களைக் கட்டிவிட்டு
சொல்லவதெல்லாம் உண்மையா
நண்பனே...??

மாத நாற்காட்டியை
வருடம் ஒருமுறை மாற்றிவிடுகிறாய்
மாயன் நாற்காட்டியும் முடிந்துவிட்டது
அவ்வளவுதான். மாற்றிவிடு
உன்னையும் சேர்த்து...

பைபிள் சொல்கிறதாம்..
கீதை சொல்கிறதாம்..
குர்ரான் சொல்கிறதாம்..
யார் இல்லை என்றது..
நாளை என்று சொல்கிறதா...??
மனிதா
அழியத்தான் போகிறது
உன்னால் தான்... ஆனால்
நாளை இல்லை...

அழியப்போகிறது என்று
சொல்கிறாய்..
யாருக்காவது உதவினாயா...?
ஒரு நேர உணவு கொடுத்தாயா..?
இல்லைத் தானே..
உனக்கே தெரியும் அழியாது என்று...
வதந்திகளால் நீ
பிரபல்யம் அடைய நினைக்கிறாய்..
உலகம் உன்னை பார்த்து
சிரிக்கிறது..
அழிவது நீயா நானா என்று..
20-12-2012
11.55-11.59 PM


நாளை இன்றாகிவிட்டது..
இன்று நேற்றாகிவிட்டது...
எல்லாமே அப்படியே தான்...
மனிதா
நீ கூட...!!

21-12-2012
12.02 AM


தமிழ்நிலா

( யாவையும் கற்பனையே...)

இரவு விடிந்துகொண்டிருந்தது, நேரம் மூன்று மணியை தாண்டியும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான், தலையணை மட்டுமே அவனிடம் அடைக்கலமாய் கிடக்க சாமத்து கோழிகளை போல் மனம் கூவிக்கொண்டு இருந்தது.

2012 இல்  இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக காணாமல் போன மழை... என இட்டு மொத்தம் ஐம்பது கவிதைகளை  உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவை  எனது "ஒரு மனிதனின் கவிதைகள்"  மற்றும் சில வலைத்தளங்களிலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில உதயன் மற்றும் காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை. 

தமிழ்நிலா

2012 இல்  இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக காணாமல் போன மழை... என இட்டு மொத்தம் ஐம்பது கவிதைகளை  உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் அவர்கள் இலங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர் யாழ்ப்பாணம் மட்டுவில் நுணாவிலை பிறப்பிடமாக கொண்டவர். நுணாவில் சரஸ்வதி வித்தியாலயம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.

உலகம் அழியப்போகிறதா...
யார் சொன்னது..
அழிந்துகொண்டிருக்கிறது..
அதுவும் இல்லை
உலகம் எப்போதோ
அழியத்தொடங்கி விட்டது
அது தான் உண்மை...

நெஞ்சில் ஈரம் என்று காய்ந்ததோ...
கொலை என்று கலை ஆனதோ..
வீரம் என்று துரோகமானதோ..
பொய்கள்  என்று உண்மையானதோ..
நேர்மை என்று ஊழல் ஆனதோ...
கற்பு என்று களங்கமானதோ..
இயற்கையை என்று விஞ்ஞானம்
முந்த நினைத்ததோ...
அன்றே அழியத்தொடங்கி விட்டது...

இறக்கப் பயப்படுகிறாயா...
பயப்படாதே
மனிதம் இறந்து நாளாகிவிட்டது..
உடல் வேண்டுமா...
எதுவும் நிரந்தரம் இல்லை
மண்தானே உண்ணபோகின்றது...
வாழ்க்கையும் அது போல் தான்..
வாழப் பழகியவன் தானே நீ...

இருப்பினும் சக்தி ஒன்றே
நிலையானது.... மதங்கள் அல்ல...
மனிதங்களை நேசிக்கும்
அந்த மகத்தனா சக்தி..
உன்னையும் என்னையும்
ஆட்டுவிக்கும் அந்த ஒரே சக்தி..
அதற்க்கு மட்டும் பயப்படு...

நாளை என்பது நிச்சயமில்லை..
புரிந்து கொண்டாய் அல்லவா...
நாளை அழியும் என்பது கூட...

தமிழ்நிலா

மண் கல்லாகி இருந்தது
கிளுவைகள் மதிலாகி இருந்தன..
கிடுகுகள் ஓடாகி
திண்ணையை மறந்து
விண்ணையே தொட்டிருந்தன
நகரத்தின் வீடுகள்...

வரவேற்பறையிலே
கண்ணாடி அலுமாரிகளுடன்
நீண்ட கட்டில்கள்..
எல்லாப்பக்கமும் நோக்கியவாறான
சுவர்களில் சாமிப்படங்கள்..
படங்களுக்கு கீழே
செருப்பு வைக்கும் மேசை..
புகை போக்கி இல்லாத
சமையலறைகள்...
பதப்படுத்தப்பட்ட உணவு..
மின்னை மட்டும் நம்பிய காற்றாடிகள்..
விலை நிர்ணயிக்கப்பட்ட குடிநீர்..
பொம்மைகளை மட்டுமே
நண்பராக கொண்ட குழந்தைகள்..
மண் மறந்த சாடிக்குள்
நிமிர்ந்திருந்த பூ மரங்கள்...

ஒரு கிராமமே அடங்கியிருந்தது
இந்த நகரத்தின்
ஒற்றை வீட்டுக்குள்....
இருப்பினும்
புதையுண்டுபோன கிராமத்தின்
மொத்த வரலாறு மட்டும்
எங்காவது ஒரு வீட்டின்
மூலையிலாவது குனிந்து
சிரித்துக்கொண்டிருக்கும்...
இது போன்ற
கறுப்பு வெள்ளை
புகைப்படங்களாய்...

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home