Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

புரிதல் பற்றி..

Leave a Comment


புரிதல்..
கண்ணீரில் தொடக்கி
புன்னகையிலும்..
புன்னகையில் தொடக்கி
கண்ணீரிலும்..
முடியலாம்...


புரிதல்..
என்னில் இருந்தான
உனது முடிவு..

நாவில் இருந்தான
வார்த்தைகளின் புரிதலை...
உண்மையில் இருந்தான
பொய்யின் புரிதலை...
ஆணில் இருந்தான
பெண்ணின் புரிதலை..
எதிலும் இருந்தான
அத்தனை புரிதல்களையும்..
வெறுமை நிரம்பிய
வெள்ளைத்தாள்களில்
விரல்கள் உதிர்த்துவிடுகின்றன....

எனக்கும் தெரியும்
உனது புரிதல் பற்றி..
நமது புரிதல் என்பது
போடப்பட்ட புள்ளியின் பின்
போடப்படும் அடையாளங்கள்...

புரிதல் என்பதைப் பொறுத்து
ஒவ்வொன்றும் வேறுபடும்...
ஆனால் இங்கு
புரிந்து கொள்வதற்கோ ஏதுமில்லை...
நம்மைத்தவிர...

தமிழ்நிலா
காற்றுவெளி February 2014
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா