அப்பாவினை பற்றி நிறைய சொல்லிக்கொண்டு இருக்கலாம், அப்பா ஆரம்பத்தில் நண்பனாயும், பின் எதிரியாகும், இறுதியில் ஹீரோ ஆகவும் மாறிப்போவார். அப்பா, அம்மா சொல்லி தான் தெரியவரும், அது போல தான் அப்பா பற்றிய கதைகளும்.
என்னில் நிறைந்துள்ள
கடதாசிப்பூக்கள்
உன் வார்த்தைகளின்
விசிறல்களில் மலர்ந்தவை
சிதறி ஓடிக்கொண்டிருக்கும்
சிலம்பின் பரல்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்..
தீயினை அணைக்க
இது போதாது தான்...
தீ படர்ந்தாகிட்டு..மேலுமாய்...
நாளொரு கனவின் முடிதலுடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...