தோல்வியால் தினம் நோகும் ஒருவனின் மனம் பேசுகிறது...

நிலா போல் தேய்கிறேன்
வெய்யிலில் காய்கிறேன்
தினமும் இரவில் கண்ணீர்
மழையில் நனைகிறேன்..
வீதியில் போகையில்
பல முகம் காண்கிறேன்,
அவை எல்லாம் எனை நோக்க
குனிந்து தான் போகிறேன்...
பள்ளி எனக்கு பிடிக்கவில்லை
பாடம் எனக்கு இனிக்கவில்லை,
கையெழுத்து அழகாய் இல்லை
தலை எழுத்தும் நல்லாய் இல்லை....
புத்தகம் பாக்கையில்
பந்திகள் சிரித்தன...
கொப்பியில் எழுத்துக்கள்
செருகியே கிடந்தன....
ஒரு முறை தோற்றால்
தோற்றது தான் எதிலுமே..
ஜெயிக்க நினைக்க
தோற்கிறேன் மீண்டுமே...
பெற்றோர் வெறுத்தனர்
தொடர் தொடர் நொடிகளுமே..
சொந்தங்கள் வெறுத்தது
எனை தினமே...!!
நண்பர்கள் நிறைந்த
என் பயணத்திலே..
எனக்காக ஒருத்தன் இல்லை
வரும் வீதியிலே....
பட்டம் பெற்றோர்
எனை மட்டம் தட்டிப்போக
நான் செத்து செத்து
பிளைகிறேன் தினம் தினமே..
என்றுமே தோற்றதில்லை
கல்வியிலே -- எனக்கு
இலட்சியம் இருந்தது நெஞ்சினிலே..
திசை மாறி போன பாதையாலே
சிதைந்து தான் போனது
என் வாழ்க்கையுமே.....
தமிழ்நிலா
Dont worry sanju all will be sucessful
ReplyDeletethankzz acca....
ReplyDelete