
உழைப்பின் வாசம்..
நினைவுகளின் பிசுபிசுப்பு..
அன்பின் பரிதவிப்புக்கள் மீதமிருக்க
அத்தனையும் சூனியமாய்..- கூடவே..
அடையாளம் ஏதுமற்ற நான்,
அடையாளம் கண்ட நீ..
இடைவெளி நெருங்காத
குறும் பயணத்தின்
நீண்ட நேரத்தின் கடை நொடி அது..
நீ, நான் இன்னும் ஏதோ ஒன்று..
எதிரில் நிறுத்தம்...
மீண்டும் பழகிய ஒன்று..
இருப்பினும் நின்று போன அதே
தரிப்பிடத்திலிருந்து
நீண்டு கொண்டது எம் பயணங்கள்...
தமிழ்நிலா

போலிகள் கொடுத்து
காலிகள் நிரப்பப்ப..
சாலை எங்கிலும்
சோலையாய் மொய்த்தனர்
சாலை எங்கிலும்
சோலையாய் மொய்த்தனர்
மறைந்து திரிந்தவர்
உரிமை என்றனர்..
மறைந்தவர் கொண்டு
உரிமை என்றனர்..
மறைந்தவர் கொண்டு
உரிமை பேசினர்..?
மறந்து திரிந்தவர்
மறந்து திரிந்தவர்
உரிமை கேட்டனர்..
கொள்கை பேசியோர்
கொள்கை பேசியோர்
கொள்கை இழந்தனர்...?
கொள்ளை அடிப்பதற்காய்
வெள்ளை பூசினர்
கொள்ளை அடிப்பதற்காய்
வெள்ளை பூசினர்
வேட்டிகள் வந்தனர்
சேலைகள் தந்தனர்...
நம் வாக்குகள் வேண்டி
பொய் வாக்குகள் தந்தனர்...
வீதிகள் வந்தன, மின்னும் வந்தது..
கற்பனை எல்லாம் சொற்களாய் வந்தது..
கற்பனை எல்லாம் சொற்களாய் வந்தது..
சொன்னவர் பின்னே வந்தவை எல்லாம்
அன்றே போயின.. அன்றோடு போயின
போனவர் வருவார், இல்லை
அவர் பேரனார் வருவர்...
வருடங்கள் ஐந்து பறந்துடும் இங்கு..
மறக்காதே தம்பி அவைகள் விசஜந்து...
மறக்காதே தம்பி அவைகள் விசஜந்து...
தமிழ்நிலா
ஒரு துளி மழை - பின்
மீண்டும் பிரபஞ்சம் ஆரம்பம்....
ஒரு மணியில் இருந்து
சில பருக்கைகளை பெற்றுவிட
எத்தனை போராட்டம்...
அவனி... ஆகாயம்...
இரண்டுக்கும் இடையில்...
தினம் தினம் போராட்டம்..
கால்வயிறு நிரப்ப
கால் வைத்து
காணாமலும் போய்விடுவார்கள்
கால்வயிறு நிரப்ப
கால் வைத்து
காணாமலும் போய்விடுவார்கள்
அவர்கள்...
சேறு... சோறு...
இரண்டுக்கும் நடுவில்சேறு... சோறு...
ஓயாதொரு பெரும் போர்.
தண்ணீர் வேண்டி
கண்ணீர் கொட்டும் எம் உழவர்
வாழ்வில் தினம் தினம்
போர்தான்...
இப்போது மிச்சம்..
பொங்கல்... இப்போதெல்லாம்..
கவலைகளின் பொங்கலாகவே
முடிந்துவிடுகிறது....
தமிழ்நிலா
காற்றுவெளி 2014
வாழ்வில் தினம் தினம்
போர்தான்...
இப்போது மிச்சம்..
எதுவுமில்லை..
உடைந்த நம்பிக்கைகள் மட்டுமே!
இறையிடம் இறைஞ்ச மட்டுமே
முடிகிறது எம்மால்...
கவலைகளின் பொங்கலாகவே
முடிந்துவிடுகிறது....
தமிழ்நிலா
காற்றுவெளி 2014









