Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

மௌனம் சம்மதம் மட்டுமா..??

5 comments

மௌனம்
சம்மதம் மட்டுமா...?

உணர்சிகளின்
வெளிப்பாடு..
எண்ணங்களின்
செயற்பாடு..

ஒலி இல்லாத முதல் மொழி...

புத்திசாலிகளின்
ஆயுதம்..
கோழைகளின்
கேடயம்...

ஆண்களின்
பலம்...
பெண்களின்
பலவீனம்..

சந்தோசத்தில் மௌனம்..
துன்பத்தில் மௌனம்..

மௌனம்
இருளில் வெளிச்சம்,
வெளிச்சத்தில் இருள்...

மௌனம் என்பது 
வாய்பேசா அடிமைத்தனம் அல்ல...

மௌனம் வரம்
நம்மைநோக்கி தவமிருந்து
நாமே பெறுவது..

உடல்மொழி மௌனம்
உயிர்மொழி மௌனம்

மௌனம்
மந்திர ஓசை!
மாயா ஜால வித்தை...

உன்னால் மௌனமாக 
இருக்க முடியுமா...?
மௌனம் செயல் அல்ல...
மௌனம் ஒரு கலை...

உன்னால் மௌனத்தின்
சத்தத்தை உணரமுடிகிறதா...?
மௌனம் நிழல் அல்ல 
மௌனம் நிஜம்...

மௌனம்..
சிக்கலான மொழி, 
சிக்கனமான மொழியும் கூட...

காகிதம் மௌனமாக இருந்தால்
ஓவியம் பேசும்...
பேனா மௌனமாக இருந்தால் 
கவிதைகள் பேசும்...

மௌனம் சம்மதமா
இல்லை.. இல்லை...
சம்மதம் இல்லை என்பதும் கூட...

மௌனம் என்பது கேள்வி
பதிலும் மௌனம் தான்....

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

  1. Anonymous7:09:00 am

    கேள்வியுடன் விடைகளை தொடருகிறேன் அருமையான பதிவு

    ReplyDelete
  2. //Maunam aanagalin balam pengalin balaveenam //


    romba athiradiyana unmaiyana varigal
    thodarattum ithu pondra payanam :)

    ReplyDelete
  3. //Maunam aanagalin balam pengalin balaveenam //


    romba athiradiyana unmaiyana varigal
    thodarattum ithu pondra payanam :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா