Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

வெடிக்க
வண்ணமத்தாப்பு,
சுவைக்க
இனிப்பு பலகாரம்,
குடிக்க
கூலாக குடிபானம்,
உடுக்க
உயர்ரக புடைவை,
குதுகலிக்க
தியேட்டர் படங்கள்....
காதலிக்க
ஆண் / பெண்...

இது ஒருவகை தீபாவளி..!!

பட்டாசு தொழிற்சாலையில்
விடுமுறை இல்லாமல்
குழந்தை தொழிலாளர்கள்...

மலையக தோட்டங்களில்
போனசும் இல்லாமல்
பெண் தொழிலாளர்கள்...

அரபு வனங்களில்
சம்பளமே இல்லாமல்
இளம் தொழிலாளர்கள்..

சாலை ஓரங்களில்
உணவே இல்லாமல்
கூலி தொழிலாளர்கள்...

ஒழுகும் குடிசைகளில்
உடையே இல்லாமல்
முதிய தொழிலாளர்கள்..

இதுவும் ஒரு வகை தீபாவளி...!!!

உலக தொழிற்சாலையில்
நாம் எல்லாம் தொழிலாளர்கள்.. தான்

இந்த நாளில் எல்லோரும்
முடிவெடுங்கள்...
ஒருவர் ஒருவரையாவது
வாழவையுங்கள்..
--------
அன்புடன் sanjay தமிழ் நிலா


காற்றுவெளி December 2011
தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) November 2012






காற்றுவெளி மார்கழி 2011 இதழின் ஒரு மதிப்பீடு


தமிழ்நிலா, நாம் குதூகலமாகத் தீபாவளி கொண்டாட வைக்கப் பட்டாசுத் தொழிற்சாலைகளில் வறிய சிறுவரும், மலையகத் தோட்டங்களில் பெண்களும் எவ்வாறு விடுமுறைகளின்றி விய-ர்வை சிந்துகின்றனர் எனப் பாரதியையே எம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தித் தன் கவிதையால் அழவே வைக்கிறார்.

பேராசிரியர் கோபன் மகாதேவா
21-12-2011
Dear THAMIL NILA,



Congratulations !



We are happy to announce that you are one of the winner in the Tamil Poetry competition conducted by Kavya Creative Media Pvt Ltd (www.tamildigest.com).


We would like to speak to you regarding this competition results and also validate the poem written by you. Please send us the following information along with your contact information as soon as possible..

அன்பு உள்ளங்களே...
நான் அனுப்பிய பின் தொடர்பு கொண்ட அவர்கள் முதல் பரிசு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்கள். சந்தோசமாக இருக்கிறது. நன்றி Kavya Creative Media Pvt Ltd (www.tamildigest.com). 

Category 2 (Age > 18 yrs – Open category)
1st Prize:  Sancheyan Nanthakumar
 Jaffna, Sri Lanka
College Of Technology, Jaffna
 Poetry Topic Chosen: சமாதானம் (Peace)
Prize Won: Sony PlayStation 3 (PS3) – Gaming Console LittleBigPlanet 2 Special Edition and Ratchet & Clank: All 4 One 




2nd Prize:  Shona Ulagapriya N
Dubai, UAE
House wife
Poetry Topic Chosen: வானவில் (Rainbow)
Prize Won: ASUS Eee PC 1001PXD-EU17-BK 10.1-Inch Netbook (Black)

3rd Prize:  Vinod Kumar
Chennai, India
House wife
Poetry Topic Chosen: வானவில் (Rainbow)
Prize Won: Apple iPod touch 8GB (4th Generation) – Black


4th Prize:  M Indumathi
Chennai, India
House wife
Poetry Topic Chosen: வானவில் (Rainbow)
Prize Won: Canon Powershot A2200 14.1 MP Digital Camera with 4x Optical Zoom (Blue)

Consolation Prizes (Open category)
Prize Won: Sylvania 8GB MP4 Player with Camera and FM Tuner
1. R.Govindan
Chennai, India
Poetry Topic Chosen: சமாதானம் (Peace)
2. Kavithuvaa [a] Sivapragalya
Chennai, India
Poetry Topic Chosen: மின்னல் (Lightning)
3. Ruban Rex Peter
Chennai, India
Poetry Topic Chosen: சமாதானம் (Peace)
4. Uma Maheswari Manoraj
Chennai, India
Poetry Topic Chosen: தமிழ் பண்டிகை (Tamil Festival)
5. Anand Parthiban
Salem, India
Poetry Topic Chosen: இயற்கை (Nature)
6. R. Srinivas Prabhu
Chennai, India
Poetry Topic Chosen: Out of topic

இது தான் அந்த கவிதை


நான் வாழும் போதே
இது மாற வேண்டும்..
நாளும் ஒரு கனவாவது
நிஜமாக வேண்டும் ...

பீரங்கி கொண்டு சேற்று
வயல் உழுதிட வேண்டும்..
கந்தக பூமியிலே சந்தனம்
விளைந்திட வேண்டும்..

ஆயுதம் ஏந்திய கைகளில்
புத்தகம் ஏந்திட வேண்டும்.
உயிர் எடுத்த தோட்ட இனி
பூ தூவ வேண்டும்..

சிறை சாலை மூடி நீ
நூல் சாலை ஆக்கு..
தளங்களை தகர்த்து
பள்ளிகளாய் மாற்று...

அணு உலையை மூடி
சோத்து உலையினை ஏற்று,
தினம் முழு நேர உணவு உண்டு
உன் பசியை ஆற்று...

ஒரு நாட்டு எல்லைக்குள்
ஏது ஒரு சண்டை..
ஒரு தாயின் மக்களாய்
வாழ்ந்து நீ காட்டு...

அயல் நாடு உன் சொந்தம்
யுத்தம் ஏனோ..
நாடுகள் தோறும்
நீ மங்களம் பாடு....!!

விஞ்ஞான அறிவுகள்
என்றும் உயிர் காக்க வேண்டும்...
மெஞ்ஞானம் மறவாமல்
உயிர் வாழ வேண்டும்...

ஓசோனில் துளைகளை
நீ நீக்க வேண்டும்..
உனோட ஆயுள் நூறு அல்ல
முன்நூறாக வேண்டும்...

ஜாதிகள் இல்லாத புது
உலகம் வேண்டும்...
அங்கே நான் மீண்டும்
பிறந்திட வேண்டும்....

மதங்கள் அது மடமை
அதை மறந்திட வேண்டும்..
எல்லா கடவுளும் ஒரு
மதம் என்று
வாழ்ந்திட வேண்டும்

வசை பாடும் மனிதர்
எல்லாம் கவி பாட வேண்டும்.
ஏழைகளின் வாசல்
திறந்திட வேண்டும்..
பணக்காரர் வேசம்
இனி போக வேண்டும்...

நாகரிக மோகம்
தள்ளி போக வேண்டும்..
காமம் இல்லா காதல்
என்றும் வேண்டும்...
தந்தையின் பேர் சொல்லும்
பிள்ளைகள் வேண்டும்..
பத்தினி பெண்கள் மட்டும்
உயிர் வாழ வேண்டும்........

தமிழ்நிலா




வி.எஸ்.துரைராஜா (V.S.Thurairajah) என்றால் யார் என்பது இன்றைய சமூகத்தினர்களுக்கோ, இளையவர்களுக்கோ தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜா.

பிறைதேடும் இரவிலே.. உயிரே..
எதைத்தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா....


வரிகள் : தனுஷ்

காதலின் பரிசு வலிகள் தான்

காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற்களைப்போல் பாசம் கிடைத்தாலே காதல் தான். இது தான் காதலா என்று வெக்க வைத்ததும் அதே காதல் தான்.

உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள், உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல, கல்லூரி காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது. நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை/ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்

கவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்களை பிரிப்பது என்பது சாத்தியமே இல்லை. வைரமுத்து காலத்தில் கவிதைகளாக பாடல்கள் வலம் வர தொடங்கியது.

காதல் சாரம்..! - இதுவும் கீதை இந்த தலைப்பை பார்த்து பலர் பலவிதமாக நினைக்கக் கூடும். குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை மதங்களால் அணுகவேண்டாம்.இது காதலில் தோற்ற ஒருவனை பழைய நிலைக்கு கொண்டு வருவதாக நகைச்சுவைக்காக எழுதியது அதனால் தப்பு இல்லை என்பது என் கருத்து..

ஏதாவது வித்தியாசமா எழுதுவம் என்று நினைத்தேன். தூக்கம் வந்த படியால் பதினைந்து நிமிடத்தில் எழுதியது இந்த கவிதை (போன்ற ஒன்று), திரையில் மலர்ந்த படங்களில் எனக்கு பிடித்த, என் ஞாபகத்தில் இருந்தவற்றை பயன்படுத்தியுள்ளேன்..

எந்த தினசரி பத்திரிகையை பார்த்தாலும், ஏன் இணையத்தளத்தை பார்த்தாலும் செய்திகள் எல்லாம் போதை தான், இருப்பினும் அதிலே போதைப் பொருள் பாவனை என்பது அதிகமாக அடிபடுகிறது.

தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியிற் கல்வி பயின்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி பட்டதாரியானார்.
மொரிசியசு அல்லது மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது. ஆட்சி மொழி - ஆங்கிலம்.
சினிமா இப்போது உலகையே ஆக்கிரமித்துவிட்டது. இது எல்லாமலும் இருக்கலாம் படம் இல்லாமலா? அது முடியாது என்பதே இப்போதைய பதில். வயசு வேறுபாடு இல்லாமலே எல்லோரும் ஒன்றாக போகும் இரு இடங்களில் இதுவும் ஒன்று.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

"சாதிகள் இல்லையடி பாப்பா! அது அப்போ....!! சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ..."

சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக  இட்டதன் காரணம் சாதிகளின் பெயரைச் சொல்லி மற்றவர்களை இழிவுபடுத்தவோ அல்லது கீழ்மைப்படுத்தவோ அல்ல.
இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக கறை படிந்த சிறகுகள்.. என இட்டு மொத்தம் ஐம்பது விடையங்களை உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவற்றில் அதிகமானவை எனது "ஒரு மனிதனின் கவிதைகள்" வலைத்தளத்திலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை. 

எனது முதல் கவிதை தொகுதி உங்களுக்காக...



(2005 -2011 )

இதை தொடர்ந்து இரண்டாவது இணைய கவிதை தொகுதி விரைவில் வெளிவரும்.. 
உனக்காக மட்டும் என் காதல்...
முற்றிலும் ஹைஹூ காதலால் நிறைந்தது..


அன்புடன் sanjay தமிழ் நிலா

இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக கறை படிந்த சிறகுகள்.. என இட்டு மொத்தம் ஐம்பது விடையங்களை உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

கருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படுவது உண்டு. இது பொதுவாக கருச்சிதைவு எனப்படும்.
இன்று அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

முதியோர் தினம்
முதியவர்களை கௌரவப்படுத்தவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாகவும்,

முதியோர் தின நாளில்..ஒரு பெரியவரின் சுய தீர்ப்பு..


திரும்பிப்பார் மகனே..

அப்பா என கூப்பிட்ட நீ
இப்போ யாரப்பா என்கிறாய்...
உன் மனைவி வந்தபின்
யாரோ என பாக்கிறாய்..

வயிற்றில் சுமந்தாள் அன்னை,
அவளுக்கு வலிக்கவில்லை...
தோளில் தினம் சுமந்தேன்
எனக்கும் வலிக்கவில்லை...
என்னை நீ சுமக்கவில்லை..
இருந்தும் எனக்கு வலிக்குறது..

மாதாந்தம் பத்தாம் திகதி
தினம் வராதா சொல்வாயா..?
பத்தாயிரம் பென்சனுக்கு
எங்கிருந்து வருகிறது
திர்டீரென அன்பெல்லாம்..???

முதுமை வந்த பின்னல் என்
முகம் பார்த்தும் நீ உன்
முகம் திருப்பி போகையில்
துடிக்காத என் இதயமும்
நொடிக்கு இருதரம் துடிக்குதடா...

திரும்பிப்பார் மகனே..

சிறுவயதில் உன்
இரவு திருவிழாவை
ஒரு வயதில்
நான் கூற சிரித்திருக்கிறாய்...
ஒரு நாள் கட்டிலில்
போனதற்காய்
கடிந்து விழுந்தாய்..
உணர்வே இல்லாமல்
தான் போகுதடா
இது கூட புரியலையா...!!

திரும்பிப்பார் மகனே

ஆறு வயதில் ஒன்றை
அறுபதுதரம் கேட்டும்
சொல்லியிருக்கிறேன்..
ஆறு தரம் தான்
அன்பாய் கேட்டிருப்பேன்..
அறுபது வயது தான்
ஆகிறது..."உனக்கு
அறளை பேந்து விட்டது,
என்கிறாள்
உன் மனைவி..

உங்களுக்கு ஆடை
வாங்குகையில் எனக்கும்
ஒன்று வாங்குங்கள்..
குளிப்பது சிரமமாக
இருக்கிறது... அடிக்கடி
உடையையாவது
மாற்றிக்கொள்கிறேன்..

குழந்தைகள் கூட
நெருங்க மறுக்கிறாய்
முதுமை தொற்றிவிடும் என்றா?
திரும்பிப்பார் மகனே..
முன்பு எங்கள் வீட்டு
பூனையை அணைத்து
மகிழ்ந்திருக்கிறாய்
நினைவிருகிறதா...??

தொழுவத்தில்
மாடுகளுக்கு வைக்கும்
கஞ்சி கலராய் இருக்கிறது
தினம் தரும் தேநீரை விட..
சத்து உணவு கேக்கவில்லை
சாகடிக்க தந்தால் போதும்
செத்து விடுகிறேன்....
வங்கியில் காசிருக்கு..
காப்புறுதியும் செய்திருக்கு..
அது போதும் உனக்கு
சுடலை வரைக்கும்...

--------

குழந்தாய் பாவம் உங்கப்பா
தாங்கமாட்டார்..
தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
மனசெல்லாம்
மெசின் ஆகிப்போனாலும்..
முதியோர் இல்லம்
நிச்சயம் இருக்கும்..
அங்கே விட்டு விடுங்கள்..
அவனாவது நிம்மதியாய்
இருக்கட்டும்..!!

தமிழ் நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home